நீர் பறவை படத்திற்காக கவிஞர் வைரமுத்து, விவிலிய பைபிளில் உள்ள சொற்களால் பாடல்களை எழுதியுள்ளார்.ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கும் நீர்ப்பறவை படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ளார்.ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
கடலோர கிறிஸ்தவ மீனவர்களைப் பற்றிய படம் என்பதால் கவிஞர் வைரமுத்து, விவிலிய பைபிள் சொற்களால் இப்பாடல்களை எழுதியுள்ளார். நீர்பறவையின் இசை அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இப்படத்தில் விஷ்ணு-சுனைனா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். |
வைரமுத்துவின் விவிலிய வார்த்தைகள்
13 Jun 2012 Comments Off on வைரமுத்துவின் விவிலிய வார்த்தைகள்
in Daily Update
வெறிகொண்ட தாய்
13 Jun 2012 Comments Off on வெறிகொண்ட தாய்
in Daily Update
பேயவள் காண் எங்கள் அன்னை – பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன்- தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்) 1
இன்னிசை யாம் இன்பக் கடலில் – எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் – அங்குத்
தாவிக் குதிப்பாள் எம் அன்னை. (பேயவள்) 2
தீஞ்சொற் கவிதையஞ் சோலை – தனில்
தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி – மது
தேக்கி நடிப்பாள் எம் அன்னை. (பேயவள்) 3
வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருங் சாத்திரம் கோடி – உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள். (பேயவள்) 4
பாரதப் போரெனில் எளிதோ? – விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும் – கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்) 5